நாமக்கல் திமுக பிரமுகர் டாக்டர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த். திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தார். இவர் இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருக்கு பல கோடி ரூபாய் சொத்து உள்ளது. அதனால் பணப்பிரச்சினை இருக்காது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.















