கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு விதமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி போட்டுக் கொள்வதனல் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
அந்த வகையில் விழுப்புரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விழுப்புரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் இனிப்பு வழங்கி கௌரவித்தனர்.













