மின்சாரம் தாக்கி துப்புரவு தொழிலாளி சாவு

0
962

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் வயது 50. இவர் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார் .


வழக்கம்போல், பணிக்கு வந்த இவர் இன்று பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதற்காக அங்கு இருந்த தண்ணீர் மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்பொழுது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து பலியானார். அவரது உடலை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தளவாய்புரம் போலிசார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here