நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி கல்லிடைக்குறிச்சி போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் உடலில் காயங்கள் இருந்ததனால் யாரோ அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்