அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 8 ஆயிரம் போதை மாத்திரைகள், 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்

0
385

சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்த 6 பாா்சல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 6 பாா்சல்களை டெல்லியை சேர்ந்த ஒருவரின் பெயரில் அனுப்பப்பட இருந்தது. பார்சல்களில் ஊட்ட சத்து மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பாா்சல்களில் உள்ள செல்போன் எண்களை தொடா்பு கொண்டனா். செல்போன் எண்கள், முகவரி அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. 6 பாா்சல்களை பிரித்து பாா்த்தனா். அந்த பாா்சல்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தன. 6 பார்சல்களில் இருந்து 7990 மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகளை உடல் வலிமை மற்றும் சக்திக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இந்த மாத்திரைகள் போதை மாத்திரைகளாக பயன்படுத்த படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மாத்திரைகள் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் இந்திய அரசு தடை விதித்து உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளுக்கு அனுப்புவற்கும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி நடந்து உள்ளது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 7990 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இந்த மாத்திரைகளின் மதிப்பு சுமாா் ரூ. 40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலி முகவரியில் இந்த போதை மாத்திரை பாா்சல்களை அமெரிக்காவிற்கு அனுப்ப முயன்ற டெல்லி நபரை தேடி வருகின்றனா்.

அதுபோல், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து யோகா மசாஜ் பந்து மற்றும் சைவ சாலட் மிக்சர் என்று குறிப்பிடப்பட்டு வந்த 2 பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பாா்த்தனா். பார்சல்களில் பதப்படுத்தப்பட உயா்ரக கஞ்சா இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். 2 பாா்சல்களில் இருந்து 1 கிலோ 225 கிராம் உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here