சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் லிவிங்ஸ்டன் (46). அங்குள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். இன்று மாலை அவர் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளைக்கு சென்றபோது, எதிரே திசையன்விளையைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவர் ஜெய்சன் மற்றும் 25 வயதான கரன் ஆகியோர் பைக்கில் வந்தனர்.
வாழைத்தோட்டம் அருகே இரு பைக்குகளும் நேர் எதிரே மோதிக்கொண்டன. இதில் கல்லூரி முதல்வர் லிவிங்ஸ்டன் மற்றும் ஜெய்சன் ஆகியோர் பலியாகினர்.

கரன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.