ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது , ‘ திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதுபோல், என் மீதும் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார். நானும் சிக்க மாட்டேன்’ என்றார்.
அரசியலில் ஆளுமையான,சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது. அரசியலுக்கு வந்தாலும் நடிப்பேன் என்றவர், உள்ளாட்சி தேர்தலின்போது வரப்போவதில்லை என்றார். பொருளாதார சரிவு பற்றி பேசியபோது ‘டெஃபனட்லி’யை மூன்று முறை உபயோகித்து சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் திருவள்ளுவர் ஞானி, சித்தர், அவரை எந்த மதத்துக்குள்ளும் சேர்க்கக்கூடாது’ என்றார்.














