விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரசார் குற்றஞ்சாட்டினர். விக்கிரவாண்டி போலீசிலும் புகார் செய்தனர். அதையடுத்து சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையிலும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் பேசியதாக இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை, சீமானை கண்டித்த அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக தமிழ் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.












