மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில், சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த புராணத்தை அடிப்படையாக கொண்டது.
இன்று சுந்தரேசுவரர்-பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.
இதில் ,அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பு. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டுக்கொண்டே வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறிக் கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள, அள்ள அன்னம் கிடைக்கும் என்பது நம்பிக்கை