கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் அன்புமணி .இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா (31) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு நிர்மலா வந்து இருந்தார். அப்போது தனது கணவர் அன்புமணி மனைவி நிர்மலாவின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில ஸ்டேட்டஸ் ஆக வைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் . தொடர்ந்து நிர்மலா போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














