டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி பகுதியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

0
472

இந்திய தலைநகர் புதுடில்லியில் மூன்று வேளான் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவருடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதோரசலூர் கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  தலைவர் ஆர். சாந்தமூர்த்தி தலைமை வகித்தார்.  

டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம்  இன்றுடன் ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது  மோடி  பதவியேற்று  எட்டாம் ஆண்டு துவக்க நாளான இன்று  நாடு முழுவதும்  கருப்பு தினமாக  அறிவிக்கப்பட்டு  அகில இந்திய விவசாயிகள் போராட்டம்  குழுவின் சார்பில்  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்  நடைபெற்று வருகிறது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here