திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட தோக்கவாடி பகுதியிலுள்ள செய்யாறு படுகையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மலர் தலைமையிலான காவலர்கள் உள்ளடங்கிய குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.
அங்கு கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கண்டறிந்து தரையில் ஊற்றி அழித்து உபகரணங்களை கையகப்படுத்தி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.















