மத்திய பிரதேச பத்தாம் வகுப்பு தேர்வுக்கான உதவி நூலில் காந்தியை தீயவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலம் ஒன்றின் கல்வி தேர்வில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், ‘ இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கூலாக கூறியுள்ளார்.
ஆனால், இந்த தேர்வு உதவி நூல் பிழை ஒரு மாதத்துக்கு மேலாக இருக்கிறது. கேம்ப்ளிங் என்ற சொல் பிழையாக காந்தி என அச்சாகிவிட்டது என விளக்கம் கொடுத்துள்ளனர். எனவே, இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விபா படேல் கூறியுள்ளார்.
கோட்சே தேச பக்தர் எனும்போது காந்தி தீயவர் தானே?












