விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இசை காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் மணிகண்டன் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி சுற்றித்திரிந்து உள்ளார் .இவரை, இவரின் தாயார் கண்டித்துள்ளார்.
பலமுறை கண்டித்தும் திருந்தாத
நிலையில் மிக கடுமையாக கண்டித்துள்ளார். இதையடுத்து ராஜபாளையம் கணபதிபுதூர் செல்லும் சாலையில் முட்புதர்கள் பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற மணிகண்டன் உடலில் பெட்ரோலை ஊற்றி
தீ வைத்துக் கொண்டுள்ளார்.
உடலில் தீ மளமளவென தீ பரவியதை அடுத்து வேதனை தாங்க முடியாமல் கதறி உள்ளார் .
இது அருகில் கட்டட வேலையில் ஈடுபட்ட கொத்தனார் சிறுவர்கள் பார்த்துள்ளனர்.
இதற்கிடையில், மணிகண்டன் தாயும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட, அனைவரும் சேர்ந்து தீயை அணைத்து உள்ளனர்.
ஆனாலும் தீக்காயம் அதிகமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












