ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிவகுமார், வண்டலூர் காவலர் பயிற்சி மையத்துக்கு மாற்றலாகியுள்ள நிலையில்,புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா பதவியேற்றார்.
மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்களை தடுப்பதில் முன்னுரிமை அளிப்பதாகவும், அரக்கோணம் பகுதியில் அடிக்கடி நடக்கும் குற்றங்கள் பற்றி கவனம் செலுத்துவதாகவும், ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறினார்.













