டாக்டர்களாக சேர்ந்து தரகர்கள் மூலம் தங்கள் பிள்ளைகளை டாக்டராக்க மேற்கொண்ட முயற்சியே தமிழகத்தில் நடந்த நீட் மோசடியின் கதைச்சுருக்கம். இதற்கு கேரளா, திருப்பத்தூர் புரோக்கர்கள் உதவியுள்ளனர்.
உதித் சூர்யா தந்தையை பிடித்ததும், பல மாணவர்கள் மோசடியாக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ரகசியம் பரசியமானது.
இவ்வாறு பிடிபட்ட இர்பான் என்ற மாணவனின் படிப்பை பற்றி விசாரிக்கப்போக, டாக்டராக கருதப்பட்ட அவரது தந்தை முகம்மது ஷபி ஒரு போலி டாக்டர், மருத்துவ படிப்பை இடையில் நிறுத்தியவர் என சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. திருப்பத்தூரில் அவர் மோசடியாக மருத்துவ தொழில் பார்த்துவந்துள்ளார்.













