திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குமார் என்பவரின் வளர்ப்பு நாய் அவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து 30 அடி தண்ணீரில் உயிருக்கு போராடியது.
இதைக்கண்ட பி.எல்.தண்டா பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் மாரியப்பன் மற்றும் குமார் மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் இறங்கி நாயை உயிருடன் மீட்டெடுத்துள்ளனர். ஆனால், மீண்டும் இவர்களால் கிணற்றிலிருந்து மேலே ஏற முடியவில்லை. கிணற்று நீர்ல் தத்தளித்து 3 மணி நேரத்துக்கு மேலாக தவித்துக்கொண்டிருந்தவர்களை மீட்க அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் கிணற்றில் சிக்கியிருந்த இருவரையும் நலமுடன் மீட்டெடுத்தனர்.