காய்கறி வண்டிக்கு 500ஆ? ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

0
374

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியைக் கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஊராட்சி மன்றத் தலைவர் நிர்வாகம் முறைகேடு செய்து வருவதாகவும், மேலும், தற்போது கொரோனா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் அப்பகுதியில் இயங்குவதற்கு 500 முதல் 1000 வரை வியாபாரிகளிடம் பணம் பெற்று வருவதாகவும், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கணக்கு வழக்குகள் கேட்டால் ஜாதியை உட்புகுத்தி பேசி மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 7 பேர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் விசாரணை நடத்தாமல் ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here