மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கிழக்கு மிட்னாபூர் பகுதி மக்களிடம் உரையாடியதுடன் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
இதன் பின்பு, ஒடிசா எல்லையை ஒட்டி அமைந்த தத்தபூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். அதன் பின் தேநீர் கடைக்கு சென்றார். அவருடன் கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் சென்றனர்.
அங்கு கடைக்காரரிடம் அனுமதி பெற்று கொண்டு அவரே தேநீர் தயாரித்து தானம் அருந்தியதுடன் அங்கிருந்த மக்களுக்கு அவரே தன் கைப்பட வழங்கினார்.













