ஊரடங்கு, தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகளை மீறி கொரோன பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10ஆம்தேதி 28, 978, 11ஆம் தேதி 29,872 என படிப்படியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்க்கை இன்று ஒரே நாளில் 34,875 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 16,99,225 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 365 உயிரிழப்பு நடந்துள்ளது.
அறிஞர்கள், மருத்துவ நிபுணர்களை கலந்து தீவிர செயல்திட்டம் வகுத்து செயல்படுத்தவேண்டியது அரசின் கடமையாக உள்ளது.














