தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவீர் மருந்து வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் டோக்கன் பெற்று, தினமும் நீண்ட வரிசைகளில் நின்று மருந்து வாங்கி செல்கின்றனர்.
மதுரையில் கடந்த இரு நாட்களாக வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு ரெம்டிசிவீர் வழங்கப்படவில்லை. உடனே வழங்கவேண்டும் என்று கோரி மதுரை மருத்துவக்கல்லூரிக்கு எதிரே நோயாளிகளின் உறவினர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.














