
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை மோடி நகர் பகுதியில்பைக்கில் சென்ற போது மாடு குறுக்கே வந்ததில் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பு செயலாளர் பென்சிகர் என்பவர் i தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது அந்தப் பகுதி விபத்து பகுதி என நெடுஞ்சாலை துறையில் எச்சரிக்கை பலகை வைக்க சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.
சாலை ஓரங்களில் மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரியாமல் இருப்பதாலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.












