சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரியும் விழா இன்று தொடங்கியது.
இந்த விழாவையொட்டி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் எளிதாக அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துள்ளனர்.














