சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்மை பற்றி புகார் செய்த துணை நடிகை யார் என்றே தெரியாது. பணம் பறிப்பதற்காக அவர் முயற்சிக்கிறார். ஒரு வழக்கறிஞர் மூலம் பேசினார். வக்கில் 3 கோடி கேட்டார். பின்னர் 30 லட்சம் வரை வந்தார்.
இது பணம் பறிக்கும் கும்பல் என்று அறிந்ததும் நான் சும்மாயிருந்துவிட்டேன். நான் ஏன் பயப்படவேண்டும்? அந்த பெண் யார் என்றே தெரியாது என்று மணிகண்டன் கூறினார். ஆனால், அமைச்சரும் தானும் கணவன், மனைவி போல்வாழ்ந்ததாகவும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வதாக கூறிவிட்டு, பின்னர் டார்ச்சர் செய்ததாகவும் சாந்தினி தெரிவித்தார்.

போலீசார் விரைவில் அவர் புகார் மீது விசாரணை தொடங்க உள்ளனர்.













