எல்லையில் கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

0
1307

தமிழக-கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடி அட்டு குழிபுரத்தில் கர்நாடக மாநிலம் ராம சமுத்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்திய போது, அதில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

தொடர்ந்து அந்த ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் 3 அட்டை பெட்டிகள் இருந்தது. அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் கொண்ட 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் பிடியில் சிக்கியவர் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 35) என தெரிய வந்தது.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கடந்த வாரம் மாண்டியா பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து ஆட்டோ ஓட்டி வந்தேன். பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் உரிமையாளர் என்னிடம் கூற தமிழக பகுதிக்கு வந்தேன்.

போலீசார் சோதனையிட்ட போது தான் ஆட்டோவில் கள்ள நோட்டுகள் இருப்பதே எனக்கு தெரிய வந்தது’ என்றார்இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here