சாத்தான்குளம் கொட்டடி கொலை: போலீசாரிடம் சிபிஐ 3 நாட்கள் விசாரிக்க அனுமதி

0
382

சாத்தான்குளம் போலீசார் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் மரணத்தை தழுவிய தந்தை , மகன் கொலை வழக்கு சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய போலீசார் சிறையில் இருப்பதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. இதற்காக மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அது மனு தாக்கல் செய்தது. அதையடுத்து இன்று காலை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 5 போலீஸார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக அவர்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் போலீசாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தனர்.

முதற்கட்டமாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here