தூத்துக்குடி மாவட்டம் குலசை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உடன்குடி பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு டூவீலரில் வந்த கொத்து வா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தாவூத் வெள்ளாளன்விளை குணசீலன் மகன் ஜெபசிங் (39) ஆகியோர் போதைப் பாக்கு புகையிலை வைத்திருந்தது தெரியவந்தது. வெளியில் விற்பனை செய்வதற்காக அதை அவர்கள் சாக்குமூட்டையில் கொண்டு வந்திருந்தனர்.
அந்தம் நடத்திய விசாரணையில் வைத்தியலிங்கபுரம் அருகே உள்ள குடோனில் அதை புகையிலையை பதுக்கியது தெரிய வந்தது. அதையடுத்து அங்கு சென்று சோதனையிட்டதில் ரூ 1.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது. போலீசார் அதையும் கைப்பற்றி தாவூதையும் ஜெப சிங்கையும் கைது செய்தனர்










