திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் நடந்த சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய பல திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
ஆலந்தலையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு, உடன்குடி சந்தை மேம்பாடு, சாத்தான்குளம் கருமேனியாற்றின் குறுக்கே தடுப்பணை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.











