நடிகர் விஜய் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பேசிய கைபேசி எண்ணை வைத்து சேப்பாக்கத்தில் உள்ள இளைஞரை மடக்கிப்பிடித்தனர் போலீசார்.
அவரை விசாரித்தால் அப்பட்டமான அப்பாவியாக இருந்தார். தன்னிடம் கைபேசியை அவசரமாக பேசவேண்டும் என வாங்கியவர் இப்படி அவசர போலீசிடம் தம்மை சிக்கவைத்துவிட்டதாக அவர் புலம்ப, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.











