நம்மவர்களுக்கு வார விடுமுறையை ஒட்டி விழாக்கள் வந்தால் விடுமுறையை அனுபவிக்கும் மனநிறைவு ஏற்படுவதில்லை. கூடுதலாக ஒரு வேலைநாளில் விடுப்பு எடுத்து ஓய்ந்தால்தான் மகிழ்ச்சி.
அரசாங்கமும் ஊழியர் உணர்வை அறிந்து தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்புவதற்கும் இந்த ஒரு நாள் தேவைப்படும். இந்த நாளை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதியை வேலை நாளாக அறிவித்துள்ளது.













