கடந்த மாதம் 24 முதல் 30ஆம் தேதி வரை நடந்த ஐ.நா.வின் 74ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் , ‘காஷ்மீரை இந்தியா படையெடுத்து, ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும்’ என மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது பேசுகையில்பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார்.
துருக்கி பிரதமர் எர்டோகனும், ‘ ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் நடக்கிறது. காஷ்மீரில் 80 லட்சம் மக்கள் சிக்கி இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளின் தலைவர்களின் பேச்சுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தவும், துருக்கியில் கப்பல் கட்டுவதை தவிர்க்கவும் மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.














