தேர்தல் விரோதம்: அதிமுககாரர் பேக்கரியை சூறையாடிய திமுக பிரமுகர்

0
611

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா முழு ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் நுழைந்த திமுக வாடிப்பட்டி இளைஞரணி செயலாளர் அசோக், தனது ஆதரவாளர்களுடன் ப பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கிவீசியும் சூறையாடினார்.

அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார். வாசலில் நின்ற இரு சக்கர வாகனங்களும் அவர்கள் தாக்குதலுக்கு தப்பவில்லை. அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு டூவிலரில் மின்னல் வேகத்தில் ஆதரவாளர்களுடன் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாடிப்பட்டி போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி தப்பியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கீழே கடையை நொறுக்கிய காணொளி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here