நெல்லை டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட படி நவீனப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக வியாபாரிகள் கடைகளை காலி செய்யுமாறு வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகித்தது ஆனால் வியாபாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர் .
நாளையோடு மாநகராட்சி வியாபாரிகளுக்கு விதித்த கெடு முடிகிறது. ஆனால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை .இந்நிலையில் நாளை காலை அவர்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து டிராபிக் ராமசாமி நெல்லை டவுன் மார்க்கெட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.அவர் காலை ஒன்பது முப்பது மணி அளவில் மார்க்கெட்டுக்கு வருவார் என வியாபாரிகள் தெரிவித்தனர்.







