சென்னை புரசைவாக்கத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் இந்தியா பற்றிய வருத்தத்தை வெளியிட்டார்.
‘காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது. மருத்துவமனைக்கு செல்லக்கூட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மக்களை மதரீதியாக பிரித்து இந்து ராஜ்யம் அமைக்க பாஜக திட்டமிடுகிறது. பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போய்விட்டது. 100{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அந்நிய முதலீடு கொண்டுவருவதே பாஜக அரசின் நோக்கமாக இருக்கிறது. ஜனவரி 8ஆம்தேதி நாடு தழுவிய தொழிலாளர் போராட்டம் நடக்கவுள்ளது’ என்றார் அவர்.












