கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவ மழை, ஆரம்பத்திலேயே சாதனை புரிந்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அண்ணா சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் பொள்ளாச்சியில் மழை அதிகம் பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிகபட்ச மழை பெய்தது.
இன்று சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













