திரை நாயகிகள் என்றாலே அரிதாரம் கலையாத வகையில் செயல்படுபவர்கள் என்ற எண்ணம் பொதுவில் உண்டு. ஆனால், நந்திதா தாஸ் உட்பட பல நடிகைகள் சமூகப்பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் தியா மிர்சா, கஸ்தூரி போன்றவர்கள் பல சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
மும்பையில் கார் நிறுத்தம் அமைப்பதற்காக 2700 மரங்கள் வெட்டப்படும் தகவல் அறிந்த ‘சாஹோ’ கதாநாயகி ஷர்தா கபூர், ‘ காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரங்களை வெட்டுவதா?’ என்று குரல் கொடுத்ததோடு, மக்களோடு மக்களாக நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.














