ராதாபுரம் அருகே ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை இணை இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்டோர்ர் சிறை பிடிக்கப்பட்டனர்.
சுருக்கு மடி பற்றிய புகார்கள் அடிப்படையில் ராதாபுரம் ராதாபுரம் வட்ட கடற்பகுதியில் மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆய்வாளர் ஜெகன் உட்பட கடலோர காவல் படையினரை சுற்றி நின்று மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
கூத்தன்குழியிலிருந்து பைபர் படகில் ஏறி கடலில் இறங்கிய படகுகளை சோதனையிட்ட நிலையில் அவர் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக உவரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் 120 பேர் மீது கூடன்குளம் கடலோர காவல் துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.












