உத்தரபிரதேசத்திலும் பீகாரிலும் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பீகாரில் தலைநகர் பாட்னா தண்ணீரில் மிதக்கிறது. வைஷாலி, சமஷ்டிப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் சாலைகள் கால்வாய்களாகின. அங்கு 20க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
உ.பி.யில் அயோத்தி, காசிப்பூர், வாரணாசி உள்ளிட்ட இடங்கள் மழையால் வெள்ளக்காடாகின. இதில் நேற்று மாலை வரை 79 பேர் பலியாகினர்.














