அனைத்து வகை வெங்காயத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய வர்த்தக அமைச்சகம் தடை விதித்துள்ளது. வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக ஏறிக்கொண்டிருக்கும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவதில் ஒரு முயற்சியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை தட்டையுத்தரவு அமலில் இருக்கும் என தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், சிறிய வணிகர்கள் 100 குவிண்டாலுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. மொத்த வணிகர்கள் 500 குவிண்டாலுக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.













