ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பிடாரத்தில் உள்ள கோயில் குழு பிரச்சினை காரணமாக கடந்த 11 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்தது. இன்று அதை திறப்பதற்கு உத்தரவு கிடைத்து தாசில்தார் முத்துக்குமார் கோயிலுக்கு வந்தார்.
கோயிலை திறந்ததும் அவருக்கு அருள் வந்து சாமியாட ஆரம்பித்தார். அவரை தொடர்ந்து பெண்களூம் சன்னதம் வந்து ஆடத்தொடங்கினர். இதனால் மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.