அக்.9, 10 மற்றும் 15,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பாக நாளை அல்லது நாளை மறுநாள் அமைக்கப்படும் தேர்தல் பணிக்குழுவுடன் திமுக இணைந்து செயல்படும். நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.













