தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்

0
1286

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மொகாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்க அணியும், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் ஒன்றோடு ஒன்று மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here