காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தும் மோர்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 விலங்குகள் உயிரிழந்தன. விடிய விடிய பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில அச்சம் ஏற்பட்டது.














