உலக நாடுகளில் அமெரிக்காவில் தான் கரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பிரேசில்.
அங்கு கடந்த 9ஆம்தேதி ஒரே நாளில் மட்டும் 31,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, 1,185 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ, உலக சுகாதார அமைப்பு ‘அரசியல் சார்புடைய அமைப்பாக’ இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்திய பிறகு உலக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.













