மேற்கு வங்காளத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மின் வாரிய தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும், போலீசார் கடுமையாக தாக்கியதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். அங்கு தொடர்ந்து அரசு திட்டங்களுக்கு எதிராக பாஜக போராடுவதும், காவல் துறை கடுமையாக நடந்துகொள்வதும் தொடர்கிறது.












