நெல்லை மாநகர மேயர் சரவணனும், கோவை மேயர் கல்பனாவும் ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். பெரும்பான்மை இருந்தும் திறமை இல்லாமலும்,,மாமன்ற உறுப்பினர்களை சரிக்கட்டத் தெரியாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையை பொறுத்தவரை, கருணாநிதி காலத்தில் இது போன்ற சூழ்நிலையில் தீவிரமான முடிவு எடுக்கப்படும். ஆனால், தற்போதைய திமுக தலைமையின் திறமையின்மை மற்றும் கட்டுப்பாட்டின்மைக்கு எடுத்துக்காட்டாக இந்த ராஜினாமாக்கள் அமைந்துள்ளன.
உள்ளாட்சி நிர்வாகத்தையே சீரமைக்க முடியாமல் இவ்வாறு தலைமையும் கட்சியினரும் திணறுவது எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இரு மாநகராட்சிகளிலும் பல கட்டங்களில் சரியான முடிவு எடுக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அதை கட்சி நிர்வாகிகளும் மேயர்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அக்கட்சியினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.