சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை மட்டும்பயிற்று மொழியாக்க அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 15ஆம் தேதி திமுக இளைஞர்,மாணவர் அணி சார்பில்சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அந்த பரிந்துரைகளை திரும்பப் பெறுமாறும், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தை முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.














