மதுரையில் நள்ளிரவில் சிக்னல் கம்பத்தில் மோதிய கார் எரிந்து சேதம் 4 பேருக்கு காயம்

0
1031

மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வழியாக நள்ளிரவில் வந்து கொண்டிருந்த கார் அதிக வேகத்துடன் சேதுபதி பள்ளி அருகேயுள்ள டிராபிக் சிக்னல் கம்பத்தில் மோதி அருகில் பூட்டி இருந்த செல்போன் கடையில் இடித்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணத்தில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து மளமளவென பரவி முற்றிலுமாக எரிய தொடங்கியதால் மதுரை டவுன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமை வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபர் தபால் -தந்தி நகரை சேர்ந்த சுகன் என்பதும் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து துறை புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here