தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட்டுறவு சங்கங்களை கலைப்பதற்கான சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களில் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக தமிழக அரசு முடிவு என தகவல் வந்தாலும், வழக்கமாக கட்சி ஆட்சி மாறும் பொழுது கூட்டுறவு சங்கங்களை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
தற்போதைய நிலையில் 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மாநிலத்தில் இயங்கி வருகின்றன.












