பொள்ளாச்சி நெகமம் அடுத்த கப்பலங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் பொள்ளாச்சி தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் அன்பரசன்(17). இவர்கள் இருவரும் பள்ளி நடைபெற்ற சமயத்தில் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பரசன் பள்ளி மாணவி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அந்த மாணவியை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி பாலுறவு கொண்டுள்ளார் இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டியும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் உடன் படித்த பள்ளி மாணவன் அன்பரசன் கட்டாயப்படுத்தி பாலுறவு கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து மாணவன் அன்பரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.